Latestமலேசியா

போத்தல் மூடிக்குள் உதடுகள் மாட்டிக் கொண்டு துடிதுடித்த சிறுவன்

கோலாலம்பூர், ஜன 6 – போத்தல் மூடிக்குள் உதடுகள் மாட்டிக் கொண்டு வீங்கிய நிலையில், ஒரு மணி நேரத்திற்கும் மேல் வலியால் துடிதுடித்த சிறுவனை, இறுதியில் தீயணைப்பு மீட்பு படையினர் காப்பாற்றினர்.

முன்னதாக 7 வயதுடைய அந்த சிறுவன், தலைநகர், Jalan Jelatek சாலையில் உள்ள கிளினிக்கிற்கு அழைத்து செல்லப்பட்டான். எனினும், அந்த போத்தல் மூடியைக் கழற்ற முடியாமல் போனதை அடுத்து, தீயணைப்பு துறையின் உதவியை அந்த கிளினிக் நாடியது.

அதையடுத்து, அந்த கிளினிக்கிற்கு விரைந்த 6 தீயணைப்பு வீரர்கள், ‘mini grinder’ எனப்படும் சிறப்பு இயந்திரத்தைப் பயன்படுத்தி, அந்த போத்தல் முடியை வெட்டி எடுத்ததாக கோலாலம்பூர், தீயணைப்பு மீட்பு துறையின் நடவடிக்கை அதிகாரி Komander Mohd Rusdi Ibrahim தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!