Latestமலேசியா

சபாவில் கீழே விழுந்த 5 வயது சிறுவனின் நெஞ்சைப் பதம் பார்த்த இரும்புக் கம்பி

கோத்தா மாருடு, மார்ச்-15 – சபா, கோத்தா மாருடுவில் கீழு விழுந்ததில் இரும்புக் கம்பி நெஞ்சிலும் கழுத்திலும் குத்தி, 5 வயது சிறுவன் படுகாயம் அடைந்தான்.

தனது தாயுடன் அருகில் உள்ள மளிகைக் கடைக்குச் செல்லும் வழியில் கால் இடறி அவன் விழுந்திருக்கிறான். அப்போது அங்கிருந்த இரும்புக் கம்பி அவன் நெஞ்சையும், கழுத்தையும் பதம் பார்த்தது.

பதறிப் போன தாய் மகனை உடனடியாக கோத்தா மாருடு மருத்துவமனையில் சேர்த்தார்.

நெஞ்சைப் பதம் பார்த்த இரும்புக் கம்பியை வெளியே எடுப்பதில் சிரமத்தை எதிர்நோக்கிய மருத்துவக் குழு, வேறி வழியில்லாமல் தீயணைப்பு மீட்புப் படையின் உதவியை நாடியது.

சிறுவனை மயக்க மருந்து கொடுத்து படுக்க வைத்து, சிறப்புக் கருவிகளைக் கொண்டு இரும்புக் கம்பியை வெட்டி தீயணைப்புப் மீட்புப் படையினர் வெளியே எடுத்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக அவன் மருத்துவர்களிடம் ஒப்படைக்கப்பட்டான்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!