Latestமலேசியா

மலாய் மொழி தெரிந்தால்தான் மலேசியக் குடியுரிமை கிடைக்கும்; நிபந்தனையில் மாற்றம் இல்லை

கோலாலம்பூர், டிசம்பர் 12 –  மலேசியக் குடியுரிமைக்கு விண்ணப்பம் செய்பவர்களுக்கு மலாய் மொழி தெரிந்திருக்க வேண்டும் என்ற நிபந்தனையில் மாற்றம் இல்லை என்று மேலவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பம் செய்பவரின் மலாய் மொழிப் புலமை, எழுத்துபூர்வமாகவும் நேர்காணல் வாயிலாகவும் பரிசோதிக்கப்படும் என்று உள்துறைத் துணை அமைச்சர் கூறியுள்ளார்.

மலேசியக் குடியுரிமையை வழங்குவதில் மலாய் மொழிக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது என்ற கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.

கடந்த மாத இறுதி வரை உள்துறை அமைச்சு 32,000 பேரிடம் இருந்து குடியுரிமை விண்ணப்பங்களைப் பெற்ற நிலையில், அக்டோபர் வரை 10,381 பேருக்குக் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு 10,000 பேருக்கு வழங்கும் இலக்கை அது தாண்டியிருப்பதாக துணையமைச்சர் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!