Latestமலேசியா

நெல் வயல் ஓரத்தில் கைவிடப்பட்ட நிலையில் சிசு மீட்பு – இளம் பெண் கைது

அலோஸ்டார், நவ 1 – அலோஸ்டாரில்கம்போங் குபாங் பங்காஸ்சில் நெல் வயல் பகுதிக்கு அருகேயுள்ள சாலையில் பெண் சிசு ஒன்று கைவிடப்பட்ட நிலையில் கண்டுப் பிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து இளம் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டதாக கோத்தா செத்தார் மாவட்ட போலீஸ் தலைவர் துணை கமிஷனர் அஹ்மாட் ஷுக்ரி மாட் அகி தெரிவித்தார். அந்த குழந்தையின் தாயார் என நப்பப்படும் 15 வயது இளம் பெண் நேற்று மாலையில் குபாங் ரோத்தான் பகுதியில் கைது செய்யப்பட்டதாக அவர் கூறினார். எனினும் அந்த பெண் சிகிச்சை பெற வேண்டியிருப்பதால் போலீஸ் ஜாமினில் அவர் விடுவிக்கப்பட்டார். அந்த இளம் பெண் பள்ளி செல்லவில்லை என்பதோடு குழந்தை கைவிடப்பட்ட குற்றவியல் சட்டத்தின் 317ஆவது விதியின் கீழ் அவர் மீது விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அஹ்மாட் ஷுக்ரி கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!