
ஆராவ், மார்ச் 1 – மக்காவ் மோசடி கும்பலின் வலையில் சிக்கிய 64 வயதுடைய விவசாயி ஒருவர் தமது சேமிப்பில் வைத்திருந்த 73,000 ரிங்கிட்டை பறிகொடுத்துள்ளார். பிப்ரவரி 24ஆம் தேதி பினாங்கு போலீஸ் தலைமையகத்தைச் சேர்ந்த இன்ஸ்பெக்டர் Saha என கூறிக்கொண்ட ஆடவன் ஒருவன் அந்த விவசாயிடம் கை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு சட்டவிரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டதால் அவருக்கு எதிராக கைது வாராண்ட் பிறப்பிக்கப்பட்டிருப்பதாக கூறியுள்ளான். அதோடு விசாரணைக்காக திறக்கப்பட்டிருக்கும் இரண்டு வங்கிக் கணக்குகளில் சேமிப்பு பணத்தை பரிமாற்றம் செய்யும்படி கூறியிருக்கிறான்.
இதனைத் தொடர்ந்து எட்டு முறை அந்த வங்கிக் கணக்கில் சம்பந்தப்பட்ட விவசாயி தமது சேமிப்பு தொகையை பரிமாற்றம் செய்ததோடு இச்சம்பவம் குறித்து தமது மகனிடம் தெரிவித்துள்ளார். மக்காவ் மோசடிக் கும்பல் தமது தந்தையை மோசடி செய்துள்ளதை உணர்ந்த விவசாயியின் மகன் இச்சம்பவம் குறித்து போலீசில் புகார் செய்துள்ளதாக ஆராவ் மாவட்ட போலீஸ் தலைவர் Superintendan Ahmad Md Rodi தெரிவித்தார்.