Latestமலேசியா

அம்புலன்ஸ் கண்ணாடியை உடைத்து அடாவடி; 43 ஆடவன் சிபூவில் கைது

சிபூ, மார்ச் 27 – சரவாக் சிபூவில் அம்புலன்ஸ் வாகனத்தின் கண்ணாடியை பாராங் கத்தியைக் கொண்டு அடாவடியாக உடைத்த ஆடவன் கைதானான்.

குளிர்சாதனப்பெட்டியைப் பழுதுப் பார்க்கும் பட்டறைக்கு வந்த மர்ம ஆடவன் அங்கிருந்த அம்புலன்ஸ் கண்ணாடியை உடைத்ததாக அதன் உரிமையாளர் நேற்று நண்பகல் வாக்கில் போலீசுக்குப் புகார் கொடுத்திருக்கிறார்.

இதையடுத்து பிற்பகல் 2 மணிக்கெல்லாம் 43 வயது அவ்வாடவனை போலீஸ் கைதுச் செய்தது.

கைதான போது அவன் கையில் வைத்திருந்த Kerambit வெட்டுக் கத்தியும் பறிமுதல் செய்யப்பட்டது.

அதோடு அம்புலன்ஸ் கண்ணாடியை உடைக்க அவன் பயன்படுத்திய Kwan Tao ரக பாராங் கத்தியும் அவனது காருக்குள் கண்டெடுக்கப்பட்டது.

சிறுநீர் பரிசோதனையில் அவன் போதைப்பொருள் உட்கொண்டதும் உறுதிப்படுத்தப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!