Latestமலேசியா

பல முக்கிய நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து நெரிசல் தொடங்கிவிட்டது

கோலாலம்பூர், பிப் 8 – இந்த சனிக்கிழமை கொண்டாடப்படவிருக்கும் சீனப் புத்தாண்டு மற்றும் பள்ளி விடுமுறை தொடங்கிவிட்டதை முன்னிட்டு நீட்டிக்கப்பட்ட விடுமுறை காலத்தின் மத்தியில் இன்று காலை பல முக்கிய நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து வாகனங்களின் நெரிசல் அதிகரிக்கத் தொடங்கின.

இன்று காலை 9 மணி நிலவரப்படி பெர்மாத்தாங் பாவ்வு-பெராய், ஸ்லிம் ரிவர்-சுங்காய், செத்தியா ஆலம்-ஷா ஆலம், பண்டார் கமுடா கோவ்-பண்டார் சௌஜானா புத்ரா ஆகிய இடங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ள வேளை, வேலை நேரம் முடிந்து மாலையிலும் போக்குவரத்து நெரிசல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக PLUS Malaysia Bhd தெரிவித்திருக்கிறது.

இதற்கிடையில் அயர் கெரோ-ஜாசின் சாலையில் போக்குவரத்து வாகனங்கள் மெதுவாக நகர்வதாக கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், கிழக்கு கடற்கரை விரைவு நெடுஞ்சாலை (LPT) 1, LPT 2, சுங்கை பெசி டோல் சாவடி மற்றும் ஸ்கூடாய் டோல் பிளாசாவில் போக்குவரத்து சீராக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!