கோலாலம்பூர், ஜன 10 – இன்று அதிகாலையில் புருவாஸ் எம்.பி ங்கே கூ ஹாம் வீட்டில் தீ வைக்கப்பட்ட சம்பவத்தை DAP சாடியது. அவரது வீட்டில் “Molotov cocktail” எனப்படும் வெட்ரோல் குண்டு வீசப்பட்டது கண்டிக்கப்பட வேண்டிய செயல் என்பதோடு வன்செயல் நமது கலச்சாரமல்ல என DAP தெரிவித்துள்ளது. இச்சம்சம்பவம் குறித்து இன்று அதிகாலையில் ங்கே தம்மிடம் தெரிவித்தாக DAP யின் தலைமைச் செயலாளர் அந்தோனி லோக் தெரிவித்தார். இதுபோன்ற கடுமையான வன்செயல் அம்சம் ஒரு குடும்பத்தின் உயிரோடு விளையாடுவற்கு நிகராக இருப்பதால் இத்தகைய செயல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார். நமது மக்களிடையே கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் இதுபோன்ற வன்செயலை எந்தவகையிலும் ஏற்க முடியாது என அந்தோனி லோக் கூறினார்.
ங்கே கூ ஹாம் மற்றும் அவரது குடும்பத்திற்கு ஆதராவை DAP தொடர்ந்து இருந்துவரும் என்றும் அவர் தெரிவித்தார். இந்த விவகாரத்தில் போலீஸ் தீவிர கவனம் செலுத்துவதோடு பொது அமைதி மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் DAP கேட்டுக்கொள்வதாக அவர் வலியுறுத்தினார்.