Latestமலேசியா

மதுபோதையில் கோத்தா கெமுனிங் ஏரியில் விழுந்து வெளிநாட்டவர் மரணம்

ஷா ஆலாம், மார்ச் 18 – சிலாங்கூர் கோத்தா கெமுனிங் ஏரியில் மூழ்கியதாக நம்பப்படும் வெளிநாட்டவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

செக்ஷன் 31-ல் ஆடவர் ஒருவர் ஏரியில் விழுந்ததாகக் கூறி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தங்களுக்குப் புகார் கிடைத்ததாக ஷா ஆலாம் போலீஸ் தலைவர் இக்பால் இப்ராஹிம் தெரிவித்தார்.

காணாமல் போனதாகக் கூறப்பட்ட இடத்திற்கு அருகிலேயே அவரின் சடலம் மீட்கப்பட்டது.

உடலில் அடையாள ஆவணம் எதுவும் காணப்படவில்லை; அதோடு இடது தோள்பட்டையில் BCG தடுப்பூசி போடப்பட்டதற்கான தழும்பும் இல்லாத காரணத்தால், அவர் வெளிநாட்டவராக இருக்கலாம் என போலீஸ் நம்புகிறது.

சம்பவ இடத்தில் மதுபான பாட்டில்கள் கண்டெடுக்கப்பட்டதை வைத்துப் பார்க்கும் போது, அவ்வாடவர் மதுபோதையில் ஏரியில் விழுந்து மூழ்கியிருக்கலாம் என இக்பால் சொன்னார்.

சவப்பரிசோதனைக்காக சடலம் ஷா ஆலாம் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இவ்வேளையில், ஷா ஆலாம் செக்ஷன் 17-ல் உள்ள ஆற்றொன்றில் இன்னொரு வெளிநாட்டவரின் சடலம் மிதந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது.

சடலத்தில் காணப்பட்ட கடப்பிதழ் நகலைப் பார்த்தால் அவர் ஒரு நேப்பாளியாக இருக்கலாம் என போலீஸ் சந்தேகிக்கிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!