Latestமலேசியா

காணாமல்போன 8 நாட்களுக்குப் பின் இளம் பெண் உடல் மீட்பு

சுங்கை பெசார், மார்ச் 5- எட்டு நாட்களாக காணாமல் போன 17 வயது இளம் பெண்ணின் உடல் நேற்று முன்தின இரவு ஜலான் கிள்ளான்- தெலுக் இந்தான் பகுதியில் உள்ள பள்ளத்தில் கண்டெடுக்கப்பட்டது. Yamaha Y1 5ZR மோட்டார் சைக்கிள் கிடந்த இடத்திலிருந்து சுமார் 30 மீட்டர் தொலைவில் அந்த இளம் பெண் கண்டெடுக்கப்பட்டார். அந்த வழியாக சென்ற வாகன ஓட்டுனர் அப்பெண்ணின் உடலை கண்டு அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளார். பிப்ரவரி 27 அன்று நள்ளிரவுக்குப் பிறகு அப்பெண் காணாமல்போனது குறித்து அவரது தாயரிடமிருந்து போலீஸ் புகாரை பெற்றதாக சபக் பெர்னாம் மாவட்ட போலீஸ் தலைவர், Superintendent Augus Salim Mohd Alias தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட பெண் தனது சகோதரியின் மோட்டார் சைக்கிளைப் பயன்படுத்தி சுங்கை அய்ர் தாவார்ரிலுள்ள உள்ள சுல்தான் இட்ரிஸ் ஷா பாலிடெக்னிக்கில் உள்ள ஒரு உணவு விடுதியில் சம்பளம் வாங்குவதற்காக பிப்ரவரி 25 அன்று இரவு 8.20 மணிக்கு தனது வீட்டை விட்டு அப்பெண் வெளியேறியுள்ளார். அப்பெண்ணை அவரது தாயார் ஆகக்கடைசியாக அதிகாலை 3 மணிக்குத் தொடர்பு கொண்டபோதிலும் அந்த இளம்பெண் தாம் இருந்த இடத்தைத் தெரிவிக்கவில்லை என்று Augus Salim கூறினார். அந்த பெண் Sekinchanனிலிருந்து சபாக் பெர்னாம் நோக்கி பயணித்ததாகவும் அவர் சென்ற மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் விழுந்ததாக நம்பப்படுகிறது. அப்பெண் விபத்து நிகழந்த இடத்திலேயே இறந்துள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!