Latestமலேசியா

சுங்கை பூலோவில் தீ விபத்து 5 தொழிற்சாலைகள் 80 விழுக்காடு சேதம்

சுங்கை பூலோ , மார்ச் 19 – சுங்கை பூலோ, Kampung Baru வில் நேற்று மாலை மணி 5.38 அளவில் நிகழ்ந்த தீ விபத்தில் ஐந்து தொழிற்சாலைகள் 80 விழுக்காடு சேதம் அடைந்தன.

தகவல் கிடைக்கப்பெற்றதைத் தொடர்ந்து Sungai Buloh, Damansara, Rawang, Selayang, Batu Arang ,Sungai Pinang மற்றும் Shah Alam ஆகிய தீயணைப்பு நிலையங்களைச் சேர்ந்த 54 அதிகாரிகள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டதாக சிலாங்கூர் தீயணைப்புத்துறையின் உதவி இயக்குநர் Ahmad Mukhlis கூறினார்.

தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்றடைந்தபோது ஐந்து தொழிற்சாலைகளில் தீ விரைவாக பரவிக்கொண்டிருந்தது. இரவு சுமார் 7.40 அளவில் தீயை அணைக்கும் நடவடிக்கை முழுமையடைந்ததாக அவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.

இந்த தீவிபத்தில் எவரும் காயம் அடையவில்லை. இத்தீக்கான காரணத்தை கண்டறிவதற்காக தீயணைப்புத்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!