Latestமலேசியா

அரச நகர மன்றமானது கிள்ளான்; சிலாங்கூர் சுல்தான் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

கிள்ளான், பிப்ரவரி 5 – கிள்ளான், அரச நகர மன்றமாக இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்தாண்டு நவம்பர் 23-ஆம் தேதி தொடங்கி, அரச நகர மன்றம் எனும் அந்தஸ்தை கிள்ளான் பெற்றது.

சிலாங்கூர் சுல்தான், சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா இன்று அதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

அதன் வாயிலாக, இதற்கு முன் நகராண்மை கழகம் என அழைக்கப்பட்ட கிள்ளான் இனி நிரந்தரமாக, அரச நகர மன்றம் என அழைக்கப்படுமென சுல்தான் ஷராபுடின் அறிவித்தார்.

அதோடு, கிள்ளான் அரச நகர மன்றத்தின் தலைவர் டத்தின் படுக்கா நோராய்னி ரோஸ்லானுக்கும், சுல்தான் ஷாராபுடின் அங்கீகார கடிதத்தை எடுத்து வழங்கினார்.

கிள்ளான் நகராண்மைக் கழகம், கிள்ளான் அரச நகர மன்றமாக அங்கீகாரத்தை பெற்றுள்ள வேளை ; அதன் உறுப்பினர்கள் இனி அரச நகர மன்ற உறுப்பினர்கள் என அழைக்கப்படுவார்கள்.

கிள்ளான் அரச நகர மன்றத்தின் தலைவர் இனி தமது ஆட்சியின் கீழுள்ள, சிலாங்கூர் மாநில அரசாங்கத்தால் நியமிக்கப்படுவார்கள் எனவும் சுல்தான் ஷராப்புடின் அறிவித்தார்.

சிலாங்கூரின் மிகப் பெரிய நகரம் கிள்ளான் ஆகும். 1977-ஆம் ஆண்டு, கிள்ளான் சிலாங்கூரின் தலைநகரமாக இருந்த வேளை ; அதன் பின்னர் கோலாலம்பூரும் தற்போது ஷா ஆலாமும் சிலாங்கூரின் தலைநகரமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!