Latestஇந்தியா

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தார்; அமைச்சர் பொன்முடிக்கு 3 ஆண்டு சிறை

சென்னை, டிச 21 – வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோருக்கு சென்னை உயர்நீதிமன்றம் இன்று 3 ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் 50 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்துள்ளது.

2011ஆம் ஆண்டுக் காலக்கட்டத்தில் தி.மு.க ஆட்சியின்போது உயர்க்கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடியும் அவரது மனைவியும் இக்குற்றத்தில் ஈடுபட்டதற்காக அவர்களுக்கு இந்த தண்டனையை நீதிபதி விதித்துள்ளார்.

2ஆண்டுகளுக்கு மேல் தண்டனை பெறுபவர்கள் தேர்தலில் நிற்க முடியாது, எனவே பொன்முடி அவரது எம்.எல்.ஏ பதவியை இழக்கும் சூழல் இப்போது ஏற்பட்டுள்ளதோடு அமைச்சர் பதவியிலும் நீடிக்க முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.

அதே வேளையில் மூன்று ஆண்டு சிறையை எதிர்த்து மேல் முறையீடு செய்யும் வகையில் 30 நாட்கள் அவர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து எதிர்வரும் ஜனவரி 2 ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில பொன்முடி மேல்முறையீடு செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!