புதுடெல்லி, நவ 25 – சண்டைக்குப் பின் வந்த கோபத்தில், தன் மனைவி மற்றும் 2 வயது மகளை விஷப் பாம்பைக் கொண்டு கொன்ற ஆடவன் கைது செய்யப்பட்டுள்ளான். இச்சம்பவம் கடந்த அக்டோபர் மாதம் புதுடெல்லி, ஒடிசா மாநிலத்தில் நிகழந்துள்ளது.
மனைவி மற்றும் மகள் உறங்கிக் கொண்டிருந்த அறையில், விஷப் பாம்பை விட்டு அவன் இக்கொடூரச் செயலைப் புரிந்துள்ளான்.
வீட்டில் ஒரு பூஜை என்று கூறி நண்பனிடமிருந்து அப்பாம்பை பெற்ற அந்தக் கணவன், அவர்கள் உறங்கிக் கொண்டிருந்த அறையில் பாம்பை விட்டுவிட்டு, மற்றொரு அறையில் உறங்கச் சென்றுள்ளான்.
மறுநாள் காலையில் அவ்விருவரும் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டனர். அவனுக்கு எதிரான வலுவான ஆதாரங்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டதை தொடர்து, நேற்று ஆதாரங்களுடன் அவன் கைதானான்.
முதலில், அப்பாம்பு சொந்தமாக அறையில் புகுந்துவிட்டதாக கூறிய அவன், பின்னர் விசாரணையில் உண்மையைக் கூறியுள்ளான்.