கோலாலம்பூர், நவம்பர் 10 – கெப்பாலா பத்தாஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சித்தி மஸ்துராவுக்கு கொடுக்கப்பட்ட 48 மணி நேரம் கால அவகாசம் இன்றோடு முடிவுக்கு வந்த நிலையில், அவருக்கு எதிராக குவான் எங் அவதூறு வழக்கு தொடுத்துள்ளார்.
DAP கட்சித் தலைவர் லிம் குவான் எங்கிற்கும், கமினிஸ்ட்டு தலைவர் சின் பெங், லீ குவான் இயூ ஆகியோருக்கு இடையில் குடும்ப உறவு இருப்பதாக இதற்கு முன் கூறிய மஸ்துரா, தமது அந்த கூற்றை 48 மணி நேரத்திற்குள் நிரூப்பிக்க வேண்டுமென, குவான் எங் காலகெடு வங்கியிருந்தார்.
எனினும், அதனை நிரூபிக்க தவறியதோடு, தம்மையும், தமது மனைவி பெட்டி சியூ மற்றும் இதர சில DAP தலைவர்கள் குறித்தும் மஸ்துரா வேண்டுமென்றே அவதூறான கூற்றை வெளியிட்டதால், அவருக்கு எதிராக குவான் எங் வழக்கு தொடுத்துள்ளார்.
தமது சார்பில், வழக்கறிஞர் டத்தோ சங்கரா நாராயணன் நாயர் வழக்கை வழிநடத்துவார் என குவான் எங் சொன்னார்.
இம்மாதம் நான்காம் தேதி, கெமாமானில், பாஸ் கட்சியின் நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றிய பொது, மஸ்துரா அந்த அடிப்படையற்ற கூற்றை வெளியிட்டதாக கூறப்படுகிறது.
அந்த கூற்று உண்மை தான் என்பதை, 48 மணி நேரத்திற்குள் மஸ்துரா நிரூபிக்க வேண்டுமென, குவான் எங் காலக்கெடு வழங்கியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.