Latestமலேசியா

மலேசிய சீன நட்புறவை வலுப்படுத்தும் முயற்சியாக அன்வார் பெய்ஜிங் சென்றடைந்தார்

பெய்ஜிங்,மார்ச் 30 – மலேசியாவுக்கும் சீனாவுக்குமிடையே நட்புறவை மேலும் வலுப்படுத்தும் நோக்கத்தில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று மாலை பெய்ஜிங் சென்றடைந்தார். Hainan – னிலிருந்து சிறப்பு விமானத்தின் மூலம் பெய்ஜிங் சென்றடைந்த அன்வாருடன் போக்குவரத்து அமைச்சர் Anthony Loke, ஊராட்சி மேம்பாட்டு அமைச்சர் Nga Kor Ming ஆகியோரும் உடன் சென்றனர் . அவர்கள் அனைவரையும் சீன வெளியுறவுத்துறை உதவி அமைச்சர் Sun Weidong வரவேற்றார். மேலும் மலேசியாவுக்கான சீனத் தூதர் , சீனாவுக்கான மலேசியாவின் துணை தூதர்
Shanmugan Subramaniyam ஆகியோரும் விமான நிலையத்தில் பிரதமர் அன்வாரை வரவேற்றனர்.

அன்வார் நாளை சீன அதிபர் Xi Jinping – கை சந்திப்பார். இருவழி நட்புறவு குறித்து அவர்கள் விவாதிப்பார்கள். சனிக்கிழமையன்று அன்வாருக்கு சீன அரசாங்கத்தின் ஏற்பாட்டில் வரவேற்பு சடங்கு நடைபெறும். அதோடு இரு நாடுகளுக்கிடையிலான புரிந்துணர்வு உடன்பாடுகளில் கையெழுத்திடும் நிகழ்வையும் அன்வார் பார்வையிடுவார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!