Latestமலேசியா

துப்பாக்கியால் சுட்டவர்களை துடைப்புக் கட்டையால் துரத்திய பெண்

புதுடில்லி, நவ 30- அரியனாவில் ஆடவர் ஒருவரை கொல்ல முயன்ற துப்பாக்கி வைத்திருந்த நான்கு ஆடவர்களை வயதான பெண் ஒருவர் துடைப்புக் கட்டையால் துரத்தினார். அந்த சம்பவம் ரகசிய கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளதோடு அது தொடர்பான காணொளி வைரலாகி வருகிறது. தமது வீட்டிற்கு வெளியே நின்று கொண்டிருந்த ஆடவரை மோட்டார்சைக்கிளில் வந்தவர்கள் கண்மூடித்தனமாக சுட்டனர். எனினும் இதனை கண்டதும் அந்த ஆடவர் வீட்டிற்குள் ஓடினார். துப்பாக்கி சத்தத்தை கேட்டதும் எதிர்வீட்டில் இருந்த அந்த வயதான பெண்மணி துடைப்புக் கட்டையை எடுத்துவந்து அவர்களை துரத்தினார். அவர் அந்த துடைப்புக் கட்டையை நோக்கி துப்பாக்கிக்காரர்களை நோக்கி வீசினர். இதனை தொடர்ந்து தாக்குதல் நடத்திய துப்பாக்கிக்காரர்கள் உடனடியாக அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!