கோலாலம்பூர், டிச 26 – ரவாங் சுங்கை சோவில் உள்ள வீட்டிற்கு ஒரு பின்னால் ஆடவரின் உடல் புதைக்கப்பட்டது அண்மையில் கண்டுப்பிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து அதன் தொடர்பில் ஐந்து சந்தேகப் பேர்வழிகளை போலீசார் கைது செய்தனர்.
அந்த ஆடவரின் உடலில் மேற்கொள்ளப்பட்ட சவப் பரிசோதனையில் தலை மற்றும் உடல் முழுவதிலும் தாக்கப்பட்டதற்கான காயங்கள் கண்டறியப்பட்டது. அந்த ஆடவரின் கொலையில் சம்பந்தப்பட்ட 19 முதல் 45 வயதுடைய அந்த சந்தேகப் பேர்வழிகள் அனைவரும் ஏழு நாட்களுக்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் 24 மணி நேரத்திற்குள் கைது செய்யப்பட்டதாக கோம்பாக் மாவட்ட போலீஸ் தலைவர் நூர் அரிபின் நசீர் தெரிவித்தார்.
அவர்கள் அனைவரும் மூன்று வெவ்வேறு இடங்களில் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டதாக அவர் கூறினார். அவர்களில் 29 மற்றும் 33 வயதுடைய உள்நாட்டைச் சேந்ந்த இரண்டு ஆடவர்கள் மற்றும் 32 வயதுடைய உள்நாட்டு பெண் ஒருவரும் கொலை நடந்த தினத்தில் கைது செய்யப்பட்டனர்.