
கோலாலம்பூர், டிச 26 – மாசு தூய்மைக் கேட்டினால் மூடப்பட்டிருந்த Sungai Semenyih மற்றும் நெகிரி செம்பிலானில் Bukit Tampoi LRA நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் நேற்று மீண்டும் செயல்படத் தொடங்கின. அந்த இரண்டு நீர் சுத்திகரிப்பு நிலையங்களும் நீர் தூய்மைக்கேட்டிலிருந்து முழுமையாக மீண்டுள்ளது. நேற்று மாலை 6 மணி முதல் கட்டம் கட்டமாக நீர் வினியோகம் திரும்பத் தொடங்கியதாக Air Selangor தனது முகநூலில் வெளியிட்ட அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது. இன்று பிற்பகல் 2 மணிக்குள் பாதிக்கப்பட்ட அனைத்து இடங்களிலும் நீர் விநியோகம் முழுமையாக வழக்க நிலைக்கும் திரும்பும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.