கோலாலம்பூர், டிச 4 – 47 வயதுடைய உணவு விநியோகிப்பாளர் ஒருவர் போலீஸ் அடையாள அட்டையை வைத்திருந்ததைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டார். ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட Taman Melawati போலீஸ் நிலையத்தைச் சேர்ந்த போலீஸ்காரர்கள் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் அந்த நபரை நேற்று காலை மணி 11.15 அளவில் கைது செய்தனர். சந்தேகத்திற்குரிய வகையில் அந்த நபர் நடந்துகொண்டதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டதாக Ampang Jaya போலீஸ் தலைவர் Azam Ismail தெரிவித்தார். மஞ்சள் மற்றும் நீல நிற போலீஸ் அடையாளக் கார்டை தமது பணப்பையில் வைத்திருந்த அந்த ஆடவர் இதற்கான முறையான விளக்கம் அளிக்கத் தவறியதால் அவர் கைது செய்யப்பட்டார். அந்த கார்டு போலியானது என்பதோடு அவர் அதனை சொந்தமாக தயாரித்திருக்கக்கூடும் என Azam Ismail தெரிவித்தார்.
Related Articles
Check Also
Close