Latestமலேசியா

திரெங்கானுவில் இடைநிலைப் பள்ளி சுவர் இடிந்து விழுந்தது; 16 வயது மாணவி காயம்

கோலாலம்பூர், ஜன 20- திரெங்கானு, செத்தியு, கம்போங் புத்ரா ஜெயாவில் இடைநிலைப் பள்ளியில் காங்கிரிட் சுவர் இடிந்து விழுந்ததால் 16 வயது மாணவி காயம் அடைந்தார். காங்கிரிட் சுவரின் இடிபாடுகளில் அந்த மாணவி சிக்கிக் கொண்டதாக தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு 9 தீயணைப்பு வீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டதாக செத்தியு தீயணைப்பு நிலையத்தின் தலைவர் முகமட் ரஸ்லி ராபியா தெரிவித்தார். 15 நிமிடங்களில் இடிபாடுகளிலிருந்து அந்த மாணவியை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். தொடையில் காயம் அடைந்த அந்தமாணவி உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டதாக முகமட் ரஸ்லி கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!