ஷா ஆலாம், மார்ச் 8 – தாய்லந்து காதலியை கொலை செய்ததாக சந்தேகிக்கபடும், லோரி ஓட்டுனர் ஒருவருக்கு எதிராக இன்று ஷா ஆலாம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்டது.
எனினும், 37 வயது நந்தன் விஜயகுமார் எனும் அவ்வாடவனிடமிருந்து இன்று வாக்குமூலம் எதுவும் பதிவுச் செய்யபடவில்லை.
பிப்ரவரி 28-ஆம் தேதி, இரவு மணி 10.20 வாக்கில், செத்தியா அலாமில், ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பிலுள்ள, வீடொன்றில், 32 வயது தாய்லாந்து பெண் ஒருவரை கொலை செய்ததாக நந்தன் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளான்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், மரண தண்டனை அல்லது 30 முதல் 40 ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனையுடன் 12 பிரம்படிகளும் விதிக்கப்படலாம்.
நந்தனை ஜாமினில் விடுவிக்க இன்று நீதிமன்றம் மறுத்து விட்ட வேளை ; இவ்வழக்கு விசாரணை ஜூன் ஏழாம் தேதி செவிமடுக்கப்படும்.
முன்னதாக, பிப்ரவரி 28-ஆம் தேதி, அடுக்குமாடி குடியிருப்பின் 23-வது மாடியிலிருந்து, காதலியை கீழே தள்ளி கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் ஆடவன் கைதுச் செய்யப்பட்டுள்ளதாக, ஷா ஆலாம் போலீஸ் தலைவர் முஹமட் இக்பால் இப்ராஹிம் உறுதிப்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.