கோலாலம்பூர், ஜன 18 – தமக்கு சொந்தமான அசையும் மற்றும் அசையா சொத்துக்களின் விவரங்களை 30 நாட்களுக்குள் அறிவிக்கும்படி மிர்ஷான் மகாதீருக்கு ஊழல் தடுப்பு ஆணையமான எம்.ஏ.சி.சி உத்தரவு பிறப்பித்துள்ளது. நேற்று புத்ராஜெயாவிலுள்ள எம்.ஏ.சி.சி தலைமையகத்திற்கு அழைக்கப்பட்ட மகாதீரின் மூத்த மகனும் ஒரு வர்த்தகருமான மிர்ஷானுக்கு சொத்து பிரகடனம் குறித்த நோட்டிஸ் வழங்கப்பட்டதாக இன்று வெளியிட்ட அறிக்கையில் எம்.ஏ.சி.சி தெரிவித்திருக்கிறது. 2009ஆம் ஆண்டின் எம்.ஏ.சி.சி சட்டத்தின் 36 ஆவது விதியின் உட்பிரிவு (1) மற்றும் ( b) யின் கீழ் தம்மிடம் உள்ள அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் குறித்து ஒரு மாதத்திற்குள் தெரிவிக்கும்படி மிர்ஷானிடம் எம்.ஏ.சி.சி கேட்டுக்கொண்டுள்ளது.
Related Articles
குவாலா குபு பாரு தேர்தலில் ஒற்றுமை அரசாங்க வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய ம.இ.கா பாடுபடும் – விக்னேஸ்வரன்
10 hours ago
டோல் சாவடியில் வாகனத்தை முந்தி சென்ற மோட்டார் சைக்கிள் ஓட்டி; பூம் கேட் மோதி பரந்து விழுந்த மோட்டார்
10 hours ago
Check Also
Close