கோலாலம்பூர், ஜன 12 – பெருவாஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ங்கே கூ ஹாம் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் தொடர்பில் ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டார். 30 வயதுடைய அந்த ஆடவர் இன்று அதிகாலை மணி 4 அளவில் ஷா அலாமில் கைது செய்யப்பட்டதாகவும் அந்த ஆடவர் 5 நாட்களுக்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பேரா போலீஸ் தலைவர் முகமட் யுஸ்ரி ஹசான் பஸ்ரி தெரிவித்தார். புதன்கிழமையன்று ங்கே கூ ஹாம் வீட்டில் மேற்கொள்ளப்பட்ட அந்த தாக்குதலில் அவரது வீட்டின் முன்புறப் பகுதியில் தீப்பற்றியது. அந்த சம்பவத்தில் ங்கே கூ ஹாம் வீட்டின் முன்புறம் நிறுத்தப்பட்டிருந்த மூன்று வாகனங்கள் சேதம் அடைந்தன.