Latestமலேசியா

பினாங்கில், 200 அரிய வகை விலங்குகளை வைத்திருந்த வியாபாரி ; 70 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

பட்டர்வொர்த், மார்ச் 19 – பினாங்கில், இருநூறுக்கும் அதிகமான, பாதுகாக்கப்பட்ட அரிய வகை விலங்குகளை வைத்திருந்த வியாபாரி ஒருவருக்கு, பட்டர்வொர்த் செஷன்ஸ் நீதிமன்றம் 70 ஆயிரம் ரிங்கிட் அபராதம் விதித்து தீர்ப்பளித்தது.

46 வயது லோ கொக் கியோங் எனும் அவ்வாடவர் தமக்கு எதிரான குற்றத்தை ஒப்புக் கொண்டதை அடுத்து அவருக்கு அந்த அபராதம் விதிக்கப்பட்டது.

அபாரத்தை செலுத்த தவறும் பட்சத்தில் அவர் 30 மாதம் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டுமென நீதிபதி உத்தரவிட்டார்.

பாதுகாக்கப்பட்ட அரிய விலங்குகளான, 197 மலைப்பாம்புகள், ஏழு ஆமைகள், உடும்புகள் ஆகியவற்றை அவர் வைத்திருந்ததாக கூறப்படுகிறது.

கடந்தாண்டு ஜுலை 16 மற்றும் 17-ஆம் தேதிகளில், அவ்வாடவரின் காரையும், இரு வீடுகளையும் சோதனையிட்டதில், அந்த விலங்குகள் பறிமுதல் செய்யப்பட்டன.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!