சித்தியவான், டிச 12 – இன்று விடியற்காலையில் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது சித்தியவான் பாலத்திற்கு அடியில் சிக்கிக்கொண்ட நால்வரை தீயணைப்புப்படை வீரர்கள் மீட்டனர்.
அதிகாலை மணி 1.31அளவில் தீயணைப்புத்துறை அவசர அழைப்பு பெற்றதாக பேரா தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையின் நடவடிக்கை பிரிவுக்கான துணை இயக்குனர் சபரோட்சி நோர் அகமட் ( Sabarodzi Nor Ahmad ) தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட இடத்திற்கு தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர் வந்துச் சேர்ந்தபோது Sungai Manjung ஆற்றின் நீர்மட்டம் முழங்கால் அளவு இருந்ததோடு நீர் வேகமாக உயர்ந்து வருவதைக் கண்டனர்.
இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களை மீட்பதற்கு உதவ அருகிலுள்ள படகு துறையிலிருது ஒரு படகை அனுப்பும்படி தீயணைப்பு துறையின் நடவடிக்கை பிரிவுக்கான தலைவர் கேட்டுக்கொண்டார்.
அதனை தொடர்ந்து இரண்டு ஆடவர்களும் இரண்டு பெண்களும் மீட்கப்பட்டனர். இவர்கள் அனைவரும் மேல் நடவடிக்கைக்காக பின்னர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக சபரோட்சி கூறினார்.