Latestமலேசியா

முட்டை விநியோகிப்பாளரை சந்திப்பதற்கு இந்தியா சென்றேனா – சரவணன் மறுப்பு

கோலாலம்பூர், மார்ச் 13 – முட்டை விநியோகிப்பாளரை சந்திப்பதற்காக
நான் இந்தியா சென்றேனா? மறுத்திருக்கின்றார் ம.இ.காவின் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம். சரவணன்.

இந்தியாவிற்கு நான் ஆன்மீக பயணம்தான் மேற்கொண்டிருந்தேன். விவசாய மற்றும் உணவு உத்ரவாத அமைச்சர் முகமட் சாபு மற்றும் சர்ச்சைக்குரிய வர்த்தக பிரமுகர் தீபக் ஜெய்கிஷனையும் தற்செயலாகத்தான் சந்திக்க நேர்ந்தது.
தான் பயணித்த அதே விமானத்தில்தான் அவர்களும் பயணித்திருந்தனர். நடைபாதை அதிக தூரத்தில் இருந்ததால் நாங்கள் அனைவரும் சென்னை விமான நிலையத்தில் Buggy வாகனத்தில் ஒன்றாக ஏறிச் சென்றோம் என சரவணன் தெரிவித்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமையன்று MalaysiaNow இணையத்தளம் இவர்கள் மூவரும் ஒன்றாக பயணிக்கும் படத்தை வெளியிட்டு முட்டை விநியோகிப்பாளரை சந்திப்பதற்காக அவர்கள் சென்றிருந்ததாக செய்தி வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!