கோலக்கங்சார், மார்ச் 12 – கோலக்கங்சார் மாவட்டத்திலுள்ள ஒன்பது தமிழ்ப்பள்ளியைச் சார்ந்த மாணவர்களுக்கு தான் ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன் புத்தகப்பைகளை அன்பளிப்பாக வழங்கியுள்ளார்.
சின்னராஜூ, அசோக்குமார் மற்றும் உமாபதி ஆகியோர் இப்புத்தகப்பைகளை நேரில் சென்று இத்தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு எடுத்து வழங்கினர்.
நம் மாணவர்கள் கல்வி கேள்விகளில் சிறக்கவும், தமிழ்ப்பள்ளிகளின் தரம் மேம்பட அயராது பாடுபடும் ஆசிரிய பெருமக்களுக்கும் இவ்வேளையில் தான் ஸ்ரீ விக்னேஸ்வரன் தமது மனமார்ந்த பாராட்டினைத் தெரிவித்துக் கொண்டார்.
மேலும், தமிழ்ப்பள்ளி மாணவர்கள் உலகளாவிய நிலையில் பல வெற்றி வாகை சூடி வருகின்றனர். தொடர்ந்து நம் மாணவர்களின் பல்வேறு சாதனைகளை உலக அரங்கில் பதித்துத் தமிழ்ப்பள்ளிகளின் அடையாளத்தை உயர்நிலைக்குக் கொண்டு வந்து வெற்றி காண வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.