Latestமலேசியா

ஜோகூரில், ஒழுங்கீன செயலில் ஈடுபட்ட 8 அந்நிய பெண்கள் கைது; வேலை – பயண அனுமதிகளை தவறாக பயன்படுத்தியது கண்டுபிடிப்பு

ஜோகூர் பாரு, ஜனவரி 2 – ஜோகூர் பாருவிலுள்ள, இரு உடம்பு பிடி நிலையங்களில், குடிநுழைவுத் துறை அதிகாரிகள் மேற்கொண்ட அதிரடி சோதனையில், எட்டு வியட்நாமிய பெண்களுடன், உள்நாட்டு ஆடவன் ஒருவனும் கைதுச் செய்யப்பட்டான்.

பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட தகவலையும், புகாரையும் தொடர்ந்து, நேற்று மாலை மணி நான்கு வாக்கில் அந்த அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டது.

அந்த சோதனையின் போது கைதுச் செய்யப்பட்ட 22 வயதுக்கும் 38 வயதுக்கும் இடைப்பட்ட அந்நிய பெண்கள், பயண அனுமதியையும், வேலை அனுமதியையும் தவறாக பயன்படுத்தி, ஒழுங்கீன நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்துள்ளதாக, ஜோகூர் குடிநுழைவுத் துறை இயக்குனர் பஹாருடின் தயிர் தெரிவித்தார்.

அதே சமயம், அவர்களுக்கு சட்டவிரோதமாக பாதுகாப்பு அளித்து வந்த குற்றத்திற்காக, 38 வயது உள்நாட்டு ஆடவன் கைதுச் செய்யப்பட்டதையும் பஹாருடின் உறுதிப்படுத்தினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!