Latestமலேசியா

DAP – PKR கட்சிகள் இந்தியர்களுக்கு என்ன செய்தனர்? ராமசாமி கேள்வி

கோலாலம்பூர், நவ 27 – DAP மற்றும் PKR கட்சிகள் இந்தியர்களுக்கு என்ன செய்தன. அக்கட்சியில் இந்தியர்களுக்கு என்ன வாய்ப்பு தந்தனர் என பேராசிரியர் ராமசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

‘அந்த கட்சிகளில் இந்தியத் தலைவர்கள் சுதந்திரமாக செயல்படமுடியவில்லை. அவ்விரு கட்சிகளும் இந்தியர்களுக்காக குரல் கொடுப்பதில்லை’ என நேற்று கோலாலம்பூர் ஜாலான் பண்டார் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய மண்டபத்தில் தமது தலைமையிலான உரிமை இயக்கத்தை தொடக்கி வைக்கும் நிகழ்ச்சியில் உரையாற்றியபோது பேராசிரியர் டாக்டர் ராமசாமி இவ்வாறு தெரிவித்தார்.

பினாங்கு மாநிலத்தில் பள்ளியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்தும், கடவுள் வாழ்த்தும் படிப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது கண்டனத்திற்குரியது.
தாம் அந்த மாநிலத்தின் துணை முதல்வராக இருந்தபோது இதுபோன்ற நிகழ்வுகள் எதுவும் நடந்ததில்லை என்றும் ராமசாமி சுட்டிக்காட்டினார்.

நேர்மையாகவும் தைரியாமாகவும் செயல்பட்டால்தான் சமூதாயத்திற்கு நன்மை கிடைக்கும், கண்மூடித்தனமாக பதவிக்கு ஆசைப்பட்டால் இந்த சமூதாயத்தை யார் கவனித்துக் கொள்வது என்றும் ராமசாமி கேள்வி எழுப்பினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!