Latestமலேசியா

முஹிடினின் 7 குற்றச்சாட்டுகளும் கோலாலம்பூர் செஷன் நீதிமன்றத்தில் செவிமடுக்கப்படும்

ஷா ஆலாம், மார்ச் 13 – பெர்சத்து கட்சியின் தலைவர் டான் ஶ்ரீ முஹிடின் யாசின் எதிர்நோக்கியுள்ள மொத்தம் 7 குற்றச்சாட்டுகளும், கோலாலம்பூர் செஷன் நீதிமன்றத்துக்கு மாற்றப்படவுள்ளது.
அந்த 7 குற்றச்சாட்டுகளையும் அந்த ஒரே நீதிமன்றத்தில் செவிமடுக்க குற்றம் சாட்டிய தரப்பும் தற்காப்பு தரப்பும் இணக்கம் தெரிவித்தன.

முன்னதாக, இன்று காலை ஷா ஆலாம் செஷன் நீதிமன்றத்தில் டான் ஶ்ரீ முஹிடின் யாசின் , தம் மீது சுமத்தப்பட்ட கள்ளப் பண மாற்றம் மீதான 7வது குற்றச்சாட்டினை மறுத்து விசாரணை கோரினார்.

இவ்வேளையில், ஏற்கனவே கோலாலம்பூர் நீதிமன்றம் வழங்கிய 20 லட்சம் ரிங்கிட் ஜாமின் தொகையில் முஹிடினை விடுவிக்க நீதிபதி அனுமதி அளித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!