கோலாலம்பூர், டிச 30 – ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களின் உயிரை பறித்துக் கொண்டிருக்கும் காஸா பாலஸ்தீன் போர் மற்றும் நாட்டில் சில மாநிலங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் பாதிக்கபட்டோருக்கு மனித நேய ஆதரவு தெரிவுக்கும் வகையில் மலேசியாவில் 2024ஆம் ஆண்டை வரவேற்கும் தேசிய நிலையிலான புத்தாண்டு கொண்டாட்டங்கள் இல்லை என அறிவித்துள்ளார் தொடர்புத்துறை அமைச்சர் பாமி பாட்சில்.
மக்கள் உடமைகளை இழந்து, உதவிகளை இழந்து அவதியுற்று வரும் இந்நிலையில், அவர்களுக்கு மரியாதை கொடுக்கும் வகையில் புத்தாண்டு கொண்டாட்டங்கங்களுக்கு ஏற்பாடு இல்லை என பெகிடா ‘Pekida’, இஸ்லாமிய அமைப்பின் ஆண்டு பொதுக்கூட்டத்தில் கலந்துக் கொண்ட பின்னர் அமைச்சர் இவ்வாறு கூறினார்.
ஆனால், மாநில ரீதியில், சூழலுக்கு தகுந்த கொண்டாட்டங்களை ஏற்பாடு செய்து கொள்ளலாம் என அவர் குறிப்பிட்டார்.