Latestமலேசியா

கடுமையான வாக்குவாதத்தினால் மனைவியை கத்தியால் குத்திய ஆடவர் 17 ஆவது மாடியிலிருந்து கீழே குதித்தார்

கோலாலம்பூர், ஜன 8 – கோலாலம்பூர் , செதாபாக்கில்  தனது மனைவியுடன் ஏற்பட்ட கடுமையான வாக்குவாதத்திற்குப் பிறகு, அவரை கத்தியால் குத்திய ஆடவர் அடுக்ககத்தின்   17 ஆவது மாடியிலிருந்து கீழே விழுந்தார். 44 மற்றும் 47 வயதுடைய  அந்த தம்பதியர் இந்னோனேசியர்களாவர்.  கணவன் மனைவிக்கிடையே  ஏற்பட்ட  தவறான புரிந்துணர்வினால் அவர்களுக்கிடையே  நேற்றுக் காலை மணி 11.15 அளவில்  தகராறு ஏற்பட்டது. 

அந்த பெண்ணின் கணவர்  அடுக்ககத்தின்  17ஆவது மாடியிலிருந்து கீழே குதிப்பதற்கு முன்னதாக தமது மனைவியின் நெஞ்சில்   கத்தியால் குத்தியதாக  வங்சா மாஜு மாவட்ட போலீஸ் தலைவர் அஷாரி அபு ஸமாஹ் கூறினார்.  அடுக்ககத்தின்  நீச்சல் குளத்திற்கு அருகே அந்த  ஆடவர்   இறந்து கிடந்தார். அவரது மனைவி  கூர்மையான ஆயுதத்தினால் தாக்கப்பட்டதால்  காயத்திற்கு  உள்ளானார். அப்பெண்  கோலாலம்பூர் பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதைத் தொடர்ந்து அவரது நிலைமை  சீராக இருப்பதாக  அஷாரி வெளியிட்ட அறிக்கையில்  தெரிவித்தார். இச்சம்பவம் குறித்து  விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!