ஜோகூர் பாரு, பிப்ரவரி 15 – ஜோகூர், மாசாயிலுள்ள, கிடங்கொன்றில், உள்துறை அமைச்சின் அமலாக்கா பிரிவினர் மேற்கொண்ட அதிரடி சோதனையில், பாலியல் விளையாட்டு பொருட்கள் அல்லது சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஜனவரி 29-ஆம் தேதி அந்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அந்த சோதனையின் போது, 30 வயது மதிக்கத்தக்க மூன்று பெண்களும் ஆடவன் ஒருவனும் விசாரணைக்காக கைதுச் செய்யபட்டனர்.
அதே சமயம், மலாய் சுற்று வட்டாரப் பகுதியிலுள்ள, அழகு சாதனம், சுகாதாரம் மற்றும் அன்பளிப்பு விற்பனை கடைகளிலும், இணையம் வாயிலாகவும் அந்த பாலியல் விளையாட்டு பொருட்டுகள் வெளிப்படையாக விற்கப்படுவதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஜனவரி 18-ஆம் தேதி தொடங்கி இம்மாதம் ஆறாம் தேதி வரையில், ஜோகூர், சரவாக், பினாங்கு மற்றும் பேராக் ஆகிய மாநிலங்களில், மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகள் வாயிலாக, உள்துறை அமைச்சின் அமலாக்க அதிகாரிகள் சுமார் 70 ஆயிரம் ரிங்கிட் பெருமானமுள்ள ஈராயிரத்து 295 பாலியல் விளையாட்டு சாதனங்களை பறிமுதல் செய்துள்ளனர்.
அதில் ஜோகூரில் மிக அதிகமாக ஈராயிரத்து 12 சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.