உத்தரபிரதேசம், டிச 23 – வரதட்சணை கொடுக்காததால் மனைவியின் மூக்கை, கணவர் கடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய மாநிலமான உத்தரபிரதேசத்தில் உள்ள மகேஷ்பூர் பகுதியில் வரதட்சணை கொடுமையால் மனைவியின் மூக்கை கடித்த கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
22 வயது அஜ்மி என்பவர் தனது கணவர் குடும்பத்தில் உள்ள 6 பேரும் வரதட்சணை கேட்டு தன்னை துன்புறுத்தியதாகவும், கணவர் தனது மூக்கை கடித்ததாகவும் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் படி, கணவர் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அவர் தனது புகாரில், திருமணமாகி ஒன்றரை ஆண்டுகள் ஆகிய நிலையில் 5 மாத ஆண் குழந்தை இருந்தும், குறைவான வரதட்சணை கொடுத்ததாக கூறி மாமியார் அடித்து வருவதை குறிப்பிட்டிருந்தார்.
மேலும், அவரின் கணவர் வரதட்சணையை காரணம் காட்டி பலமுறை வீட்டை விட்டு துரத்தியுள்ளதாகவும், எப்போதெல்லாம் அவர்கள் துன்புறுத்துகிறார்களோ அப்போது ஊர் பஞ்சாயத்தை கூட்டி சமரசம் செய்து வைக்கப்படும் என்றும் கூறியிருந்தார்.