பெட்டாலிங் ஜெயா, நவம்பர் 2 – கோவிட்-19 நோய்த் தொற்றுக்கு இலக்கானதால், முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் ரசாக், கோலாலம்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அதனை, அவரது சிறப்பு அதிகாரி முக்லீஸ் மாக்ரிபி உறுதிப்படுத்தியுள்ளார்.
நேற்று காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நஜிப் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு கோவிட்-19 பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது, அவர் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டது தெரிய வந்ததாக முக்லீஸ் சொன்னார்.
அதனை தொடர்ந்து தற்போது நஜிப் தனிமைப்படுத்தப்பட்டுள்ள வேளை ; அவரது நிலைமை சீராக இருப்பதை, மருத்துவமனை தரப்பினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
உடல் நலம் பாதிக்கப்பட்ட நஜிப்பிற்கு உடனடி உதவிகளை வழங்கிய சிறைச்சாலை தரப்பினருக்கும், கோலாலம்பூர் மருத்துவமனை நிர்வாகத்துக்கும், அவரது குடும்பத்தார் சார்பில் முக்லீஸ் நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளார்.