Latestமலேசியா

கோவிட்-19 தொற்றால் பாதிப்பு; நஜிப் கோலாலம்பூர் மருத்துவமனையில் அனுமதி

பெட்டாலிங் ஜெயா, நவம்பர் 2 – கோவிட்-19 நோய்த் தொற்றுக்கு இலக்கானதால், முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் ரசாக், கோலாலம்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அதனை, அவரது சிறப்பு அதிகாரி முக்லீஸ் மாக்ரிபி உறுதிப்படுத்தியுள்ளார்.

நேற்று காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நஜிப் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு கோவிட்-19 பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது, அவர் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டது தெரிய வந்ததாக முக்லீஸ் சொன்னார்.

அதனை தொடர்ந்து தற்போது நஜிப் தனிமைப்படுத்தப்பட்டுள்ள வேளை ; அவரது நிலைமை சீராக இருப்பதை, மருத்துவமனை தரப்பினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

உடல் நலம் பாதிக்கப்பட்ட நஜிப்பிற்கு உடனடி உதவிகளை வழங்கிய சிறைச்சாலை தரப்பினருக்கும், கோலாலம்பூர் மருத்துவமனை நிர்வாகத்துக்கும், அவரது குடும்பத்தார் சார்பில் முக்லீஸ் நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!