பெண்டாங், மார்ச் 28 – கெடா, பெண்டாங், கம்போங் படாங் டுரியானிலுள்ள, வீடொன்றில், தேங்காய் பால் அரைக்கும் இயந்திரத்தில் சிக்கியதில், 18 வயது பெண் ஒருவர் கையில் பலத்த காயங்களுக்கு இலக்கானார்.
நேற்றிரவு மணி 9.11 வாக்கில் அச்சம்பவம் தொடர்பில், அவசர அழைப்பு கிடைத்ததை, பெண்டாங் தீயணைப்பு மீட்ப்பு நிலைய தலைவர் முஹமட் எசாட் எம்ரான் எஜானி உறுதிப்படுத்தினார்.
உடனடியாக, சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு மீட்புப் படை வீரர்கள், 15 நிமிடங்களில் சம்பந்தப்பட்ட பெண்ணின் கையை இயந்திரத்திலிருந்து விடுவித்தனர்.
அதன் பின்னர், மேல் சிகிச்சைக்காக அப்பெண் அலோர் ஸ்டார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.