மலாக்கா, மார்ச் 27 – அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் Dr அக்மால் சாலேவுக்கு கொலை மிரட்டல் விடுத்த முதியவர் செவ்வாய்க்கிழமை காலை கைதுச் செய்யப்பட்டார்.
ஓய்வுப் பெற்ற அரசு ஊழியர் ஒருவர் செய்த போலீஸ் புகாரின் அடிப்படையில், 68 வயது அம்முதியவர், மலாக்கா Kandang-கில் வைத்து கைதுச் செய்யப்பட்டார்.
Bukit Duyong-கில் உள்ள பட்டறையில் கடந்த வாரம் புதன்கிழமை அம்முதியவர், அவ்வாறு மிரட்டல் விடுத்ததாக 62 வயது புகார்தாரர் போலீசிடம் கூறினார்.
சர்சைச்குரியக் காலுறைகள் விற்பனைக்கு வைக்கப்பட்ட விவகாரத்தில்
KK Mart சூப்பர் மார்க்கெட்டுக்கு எதிராக அக்மால் தொடர்ந்து குரலெழுப்பி வருவதால் அதிருப்தி அடைந்து அம்முதியவர் அவ்வாறு மிரட்டியதாக புகார் மனுவில் கூறப்பட்டது.
விசாரணையில் தாம் அவ்வாறு மிரட்டியதை சந்தேக நபர் ஒப்புக் கொண்டார்.
அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டிருப்பதால் போலீஸ் உத்தரவாதத்தின் பேரில் விடுவிக்கப்பட்டார்.
ஆனால், குற்றவியல் சட்டத்தின் 506-ஆவது பிரிவின் கீழ் விசாரணைத் தொடருவதாக மலாக்கா தெங்கா போலீஸ் கூறியது.