Latestஉலகம்

ரியூனியன் தீவுக்குள் நுழைய முயன்ற 38 பேர் மீண்டும் இலங்கைக்கு அனுப்பப்பட்டனர்.

பாரிஸ், ஜன 27 – பிரான்ஸின் ரியூனியன் தீவில் சட்டவிரோதமாக நுழைய முயன்றபோது கைது செய்யப்பட்ட 38 பேர் அவர்களது தாயகமான இலங்கைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். இலங்கையின் யாழ்ப்பாணம், வவுனியா, மட்டக் களப்பு ,மன்னார், கிளிநொச்சி , முல்லைத் தீவு, திரிகோணமலை ஆகிய இடங்களைச் சேர்ந்த அவர்கள் கடல் மார்க்கமாக ரியூனியன் தீவுக்குள் நுழைய முயன்றபோது இம்மாதம் 14ஆம் தேதி கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டனர். அவர்கள் அனைவரும் புதன்கிழமை இலங்கைக்கு அனுப்பிவைக்கப்பட்டதாக ரியூனியன் குடிநுழைவுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!