Latestமலேசியா

மலாக்காவில், இரு மோட்டார் சைக்கிள்கள் உரசி விபத்துக்குள்ளான சம்பவம்; ஆறாம் படிவ மாணவர் உயிரிழந்தார்

மலாக்கா, ஜனவரி 1 – நண்பருடன் புத்தாண்டு கொண்டாட்டதில் பங்கேற்க சென்ற ஆறாம் படிவ மாணவர் ஒருவரின் மகிழ்ச்சி நீடிக்கவில்லை.

மலாக்கா, ஜாலான் துன் அப்துல் ரசாக்கில் நிகழ்ந்த விபத்தில், அவர் பரிதாபமாக உயிரிழந்ததே அதற்கு காரணம்.

அதிகாலை மணி 4.40 வாக்கில் நிகழ்ந்த விபத்தில், முன்சி அப்துல்லா இடைநிலைப்பள்ளியை சேர்ந்த, 19 வயது முஹமட் பர்ஹான் ஹகிமி முஹமட் ரசிடி எனும் அம்மாணவர் உயிரிழந்தார்.

கோத்தா செமர்லாங் மேம்பாலத்திலிருந்து, தாமான் முஷபர் ஷா சாலை சமிக்ஞை விளக்கை நோக்கி செல்லும் வழியில், தனது 17 வயது நண்பர் செலுத்திய மோட்டார் சைக்கிளை முந்திச் செல்ல முற்பட்ட போது, இரு மோட்டார் சைக்கிள்களும் உரசி விபத்துக்குள்ளான.

அதனால், சாலையில் தூக்கி வீசப்பட்ட அம்மாணவர், தலையில் ஏற்பட்ட பலத்த காயம் காரணமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

எனினும், அவ்விபத்தில் சிக்கிய 17 மாணவருக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!