உலு சிலாங்கூர், பிப் 29 – வடக்கு – தெற்கு நெடுஞ்சாலையில் 434.8ஆவது கிலோமீட்டரில் Sungai Buaya டோல் சாவடிக்கு அருகே மூன்று வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்தில் பழுதடைந்த லோரியை பழுதுபார்த்துக்கொண்டிருந்த மெக்கனிக் ஒருவர் மரணம் அடைந்தார் . வாகனங்களால் மோதப்பட்டதால் 60 வயதுடைய அந்த ஆடவர் சம்பவம் நிகழ்ந்த இடத்திலேயே இறந்தார். அதற்கு முன்னதாக Bukit Beruntung கிலிருந்து Kuala Lumpur ரை நோக்கி சென்று கொண்டிருந்த அந்த லோரி பழுதடைந்தது. இரண்டு டன் லோரி, Mitsubishi storm நான்கு சக்கர வாகனம் மற்றும் Roro லோரியும் அந்த விபத்தில் சம்பந்தப்பட்டதாக Hulu Selangor மாவட்ட போலீஸ் தலைவர் Superintendan Ahmad Faizal Tahrim தெரிவித்தார். அந்த விபத்தில் மரணம் அடைந்த நபர் Mitsubishi யின் பயணி என்பதோடு சம்பவம் நடந்தபோது Roro லோரியை பழுதுப் பார்த்துக்கொண்டிருந்ததாக முன்னோடி விசாரணையில் தெரியவந்தது.
அப்போது இரண்டு உதவியாளர்களுடன் 39 வயதுடைய ஆடவர் ஓட்டிச் சென்ற இரண்டு டன் லோரி கட்டுப்பாடை இழந்து பழுதடைந்த லோரிக்குப் பின்னால் நிறுத்திவைக்கப்ப்ட்டிருந்த Mitsubishi வாகனத்தில் மோதியது. அப்போது வாகனத்திற்கு முன் இருந்த மெக்கனிக் தலையில் பலத்த காயம் அடைந்ததால் மரணம் அடைந்தததாக Ahmad Faizal தெரிவித்தார்.