கோலாலம்பூர், மார்ச் 7 – வரும் நோன்புப் பெருநாள் முன்னிட்டு மாலயன் ரயில்வே பெர்ஹாட், கூடுதலாக 10 மின்சார ரயில் சேவைகளை இயக்கவிருக்கிறது.
ஈப்போ, பட்டர்வொர்த், பாடாங் பெசார் என ETS எனப்படும் மின்சார ரயில் சேவையில் கூடிதலாக 10 சேவைகள் இணைக்கப்படுள்ளது.
பெருநாள் காலத்தில் சொந்த ஊர்களுக்கு திரும்பும் மக்கள், பொது போக்குவரத்து சேவையை பயன்படுத்துவதற்கு இந்த முயற்சி வழிவகுக்கும் என்றும் மற்ற கொண்டாடங்களுக்கும் இது போன்ற சேவை அமல்படுத்தப்படும் என போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் குறிப்பிட்டார்