புதுடெல்லி, நவம்பர் 27 – இந்தியா, சுல்தான்புரியில், பெண் ஒருவர் ஆத்திரத்தில் தனது கணவரின் வலது காதைக் கடித்து துப்பியதாக கூறப்படுகிறது.
45 வயதான பாதிக்கப்பட்ட நபர், மனைவி கடித்ததால், தனது வலது காதின் மேல் பகுதி துண்டிக்கப்பட்டதாகவும், அதனால் தாம் அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டதாகவும் கூறி, சிசிக்சைக்கு பின்னர் போலீஸ் புகார் செய்துள்ளார்.
அதனால், சம்பந்தப்பட்ட பெண் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.
நவம்பர் 20-ஆம் தேதி, குப்பைகளை வீச வெளியே சென்ற அவ்வாடவர், வீடு திரும்பியதும் அவருக்கும் அவரது மனைவிக்கும் இடையில் வாக்குவாதம் மூண்டுள்ளது.
வசிக்கும் வீட்டை விற்று, மனைவி பணம் தர கோரியதாகவும், அந்த பணத்தை கொண்டு அவர் பிள்ளைகளுடன் தனியாக வசிக்கப் போவதாக கூறியதுமே அந்த வாக்குவாதற்கு காரணம் என கூறப்படுகிறது.
அதனால், முதலில் கணவரை தாக்க முயன்ற அப்பெண், பின்னர் அவரது காதை பிடித்து கடித்துள்ளார்.
பலத்த காயங்களுக்கு இலக்கான அவ்வாடவரை அவரது மகன் மருத்துவமனைக்கு அழைத்து சென்ற வேளை ; அவருக்கு உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.