Latestமலேசியா

சிலிம் ரீவரில், இரண்டு அடுக்கு பேருந்து தீக்கிரையானது; 17 பயணிகள் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர்

சிலிம் ரீவர், ஜனவரி 19 – பேராக், ரிலிம் ரீவருக்கு அருகில், வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில், இரண்டு அடுக்கு விரைவுப் பேருந்து ஒன்று தீப்பிடித்து எரிந்தது.

எனினும், சம்பவத்தின் போது, அப்பேருந்தில் இருந்த இரு ஓட்டுனர்களும், 17 பயணிகளும் காயம் எதுவும் இன்றி உயிர் தப்பினர்.

இன்று அதிகாலை மணி 5.19 வாக்கில் அவ்விபத்து நிகழ்ந்ததாக, பேராக் மாநில தீயணைப்பு மீட்புத் துறையின் நடவடிக்கை பிரிவு இயக்குனர் சபாரோஸ்டி நோர் அஹ்மாட் தெரிவித்தார்.

ஜொகூரிலிருந்து, வட மாநிலத்தை நோக்கி பயணமான அப்பேருந்திலிருந்த அனைவரும் பாதுகாப்பாக வெளியேறி விட்டதையும் அவர் உறுதிப்படுத்தினார்.

தீக்கிரையான பேருந்து 80 விழுக்காட்டுக்கும் கூடுதலான சேதமடைந்ததாக கூறப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!