குவாலா பிலா, டிசம்பர் 26 – நெகிரி செம்பிலான், குவாலா பிலா, மெலாங்கிலுள்ள, பேரங்காடி ஒன்றின், கழிவறை தொட்டியில் உடும்பு சிக்கிக் கொண்டிருந்ததை கண்டு, ஆடவர் ஒருவர் அதிர்ச்சிக்குள்ளானார்.
நேற்று மாலை மணி 5.35 வாக்கில் அச்சம்பவம் நிகழ்ந்தது.
கழிவறை தொட்டியில், உடும்பின் தலை சிக்கிக் கொண்டிருப்பதைக் கண்டு, அங்கி இருந்த பொதுமக்கள் அதிர்ச்சிக்குள்ளானதாக, APM – குவாலா பிலா மலேசிய பொது தற்காப்பு படை அதிகாரி லெப்டனன் முஹமட் கசாலி அப்துல் ரஹிம் தெரிவித்தார்.
எனினும், பத்து நிமிட போராட்டத்திற்கு பின்னர், கழிவறை தொட்டியிலிருந்து, சுமார் நான்கு கிலோகிராம் எடையும், 80 செண்டிமீட்டர் நீளமும் கொண்ட அந்த உடும்பு விடுவிக்கப்பட்டது.
அந்த உடும்பு பேரங்காடியிலிருந்து வெளியே கொண்டு வரப்பட்டு, அதன் இயற்கையான வசிப்பிடத்தில் விடப்பட்டதையும், முஹமட் கசாலி உறுதிப்படுத்தினார்.