Latestமலேசியா

கெந்திங் மலை சூதாட்ட மையத்தில் 4.6 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள சூதாட்ட வில்லை காணாமல் போன மாயம்; திருடனுக்கு வலைவீச்சு

பெந்தோங், நவ 4 – கடந்த அக்டோபர் 28ஆம் திகதி கெந்திங் மலை சூதாட்ட மையத்தில் 4.6 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள சூதாட்ட வில்லை காணாமல் போன மாயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பெந்தோங் மாவட்ட போலிஸ் தலைவர் சுப்ரிட்டெண்டன்ட் சைஹாம் முகமது கஹர் கூறியுள்ளார்.

அம்மையத்தில் இருக்கின்ற ஒரு அறையில் அந்த வில்லைகள் வைக்கப்பட்டிருந்ததாகவும், அதை யாரோ உடைத்துச் சென்று திருடி இருப்பதாகவும் கடந்த சனிக்கிழமை தங்களுக்கு புகார் கிடைத்ததாக அவர் கூறினார்.

இவ்விவகாரம் தொடர்பில் தகவல் அறிந்த பொதுமக்கள் பெந்தோங் போலிஸ் தலைமையகத்தை தொடர்புக் கொள்ளுமாறு சைஹாம் கேட்டுக் கொண்டுள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!