
கோலாலம்பூர், பிப் 19- கடந்தாண்டு மே 21 -ஆம் தேதி, கெடா, Sintok – கிலுள்ள பல்கலைகழக மாணவர் தங்குமிட அறையில், மின்சாரம் தாக்கி எஸ். விநோசினி மரணமடைந்த சம்பவத்துக்கு UUM- மலேசிய வட பல்கலைகழகமும், உயர் கல்வி அமைச்சும் பொறுப்பேற்க வேண்டும்.
UUM-மில் உள்ள பல வசதிகள் பழமையான நிலையில் இருப்பதோடு, மாணவர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையிலும் இருப்பதாக, UUM Student Progressive Front மாணவர் அமைப்பு கூறியுள்ளது.
எஸ். விநோசினியின் மரணத்துக்கு முன்னதாக, அப்பல்கலைகழகத்தில் மின்சார கோளாறினால் 2021 ஜூலையில் தீ சம்பவம் ஏற்பட்டதாகவும் அவ்வமைப்பு கூறியது.