பெட்டாலிங் ஜெயா, டிசம்பர் 15 – இம்மாதம் ஐந்தாம் தேதி, ஆட்டிசம் குறைப்பாட்டால் பாதிக்கப்பட்ட ஆறு வயது சிறுவன் ஜெய்னை கடைசியாக உயிருடன் பார்த்ததாக கூறப்படும், இரு சிறுவர்களின் துணையுடன் போலீசார் விசாரணையை தொடர்கின்றனர்.
டாமான்சாரா டாமாய், இடமான் அடுக்குமாடி குடியிருப்பு, புளோக் R குடியிருபுக்கு அருகிலுள்ள, நீர்நிலையை சுற்றி அந்த விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.
குறிப்பாக, ஜெய்னை இறுதியாக பார்த்ததாக கூறப்படும், ஆறு மற்றும் ஒன்பது வயது சிறுவர்களை நடிக்க வைத்து, மறுகாட்சி அமைப்பை உருவாக்கி போலீசார் விசாரணையை தொடர்கின்றனர்.
அதில் முதல் சிறுவன், இன்று காலை மணி 11.20 வாக்கில், தனது தாயாருடன் சம்பவ இடத்திற்கு வந்த வேளை ; நண்பகல் மணி 12 வாக்கில் மற்றொரு சிறுவனின் அவ்விடத்தை வந்தடைந்தான்.
அந்த இரு சிறுவர்கள் நடித்து காட்டிய மறுகாட்சி அமைப்பை, போலீஸ் ஒளிப்பதிவாளர் ஒருவர் பதிவுச் செய்தார்.
முன்னதாக, ஜெய்ன் கொலை செய்யப்பட்ட நாள், அவனை உயிருடன் பார்த்ததாக கூறப்படும் அந்த இரு சிறுவர்களையும் நேற்று போலீஸ் அடையாளம் கண்டது குறிப்பிடத்தக்கது.