கோலாலம்பூர், மார்ச் 4 – செந்தூல் Padang Balangகில் பெண் வர்த்தகர் ஒருவரின் வீட்டில் புகுந்த கொள்ளையர்கள் 3.5 மில்லியன் ரிங்கிட் மதிப்புடைய ரொக்கம் , தங்கக் கட்டிகள் மற்றும் கைப் பைகளை கொள்ளைடியடித்துச் சென்றனர் . ஞாயிற்றுக்கிழமை பின்னிரவில் அந்த பெண்மணியும் அவரது குடும்பத்தினரும் வீட்டில் இல்லாத நேரத்தில் இச்சம்பவம் நடந்துள்ளதாக Wangsa Maju OCPD Supt Ashari Abu Samah தெரிவித்திருக்கிறார். வீடு புகுந்து கொள்ளையடிக்கப்பட்ட அந்த சம்பவம் குறித்து குற்றவியல் சட்டம் 457 ஆவது விதியின் கீழ் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கொள்ளை நடந்த வீட்டில் நாங்கள் விசாரணை நடத்தியுள்ளோம். அந்த வீட்டில் உள்ள CCTV கேமரா சேதப்படுத்தப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளதாக அவர் கூறினார்.