மாஞ்சாங், நவம்பர் 28 – கிளந்தான், மாஞ்சாங்கில், கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து கான்கிரீட் சுவரை மோதி விபத்துக்குள்ளானதில், பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
உடன் பயணித்த அவரது கணவரும், எட்டு மாதக் குழந்தையும் படுகாயமடைந்தனர்.
நேற்று மாலை மணி 4.05 வாக்கில் அவ்விபத்து நிகழ்ந்தது.
அவ்விபத்தில் உயிரிழந்தவர் 21 வயது நொர்மைஜைதுல் நசிரா ரஹமாட் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
படுகாயமடைந்த அவரது 20 வயது கணவர் முஹமட் ஹலிமி ஹகிம் இஸ்மாயிலும், குழந்தையும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வாகனமோட்டியின் கவனக்குறைவால் அவ்விபத்து நிகழ்ந்தது தொடக்க கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக, மாஞ்சாங் மாவட்ட போலீஸ் தலைவர் சுப்ரிடெண்டன் முஹமட் அட்லி மாட் டாவுட் தெரிவித்தார்.